உடுமலை, ஜூன் 25- அரசு கேபிள் டிவி நிறுவனம் குறைந்த கட்டணத்தில் கேபிள் ஒளி பரப்பை அளித்திட வேண்டுமென செவ்வாயன்று நடைபெற்ற அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. உடுமலை ஒன்றிய அலுவல கத்தில் அரசு கேபிள் டிவி ஆப்ப ரேட்டர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு தனி வட்டாட்சியர் ஜெய்சிங் தலைமை தாங்கினார். இதில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த கேபிள் டிவி ஆப்பரேட்டர் கள் கலந்து கொண்டு கூறியதா வது, இப்பகுதியில் அரசு கேபிள் நிறுவனத்தில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட சந்தாதாரர்கள் இருந்த னர். அரசின் கேபிள் நிறுவனத்தின் அதிக கட்டண உயர்வால் பாதிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் தனியார் டிஷ் (DTH) இணைப்புகளுக்கு மாறிவிட்டனர். இதனால் அரசு கேபிள் நிறுவனத்தை மட்டுமே நம்பி இருந்த அனைத்து ஆப்ப ரேட்டர்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். மேலும் தனியார் நிறுவனங்கள் குறைந்த சந்தாதாரர்கள் வைத் துள்ள போதும், சந்தாதாரர்களுக்கு அதிகளவு சேனல்களை சலுகை களாக வழங்கி வருகிறது. ஆனால் அரசு கேபிள் நிறுவனம் மட்டும் ஏன் வழங்க மறுக்கிறது. அரசு கேபிள் நிறுவனம் குறைந்த விலையில் தமிழ் பேக்கேஜ் தர வேண்டும். மேலும் மக்களுக்கு தேவையில்லாத சில சேனல்கள் முன் வரிசையில் வருவதை தவிர்க்க வேண்டும். இப்பகுதியில் உள்ளூர் சேனல்கள் வருவது இல்லை. இதனை மாற்றி முதலில் வருமாறு அமைக்கப்பட வேண்டும். சந்தாதாரர்கள் பணம் செலுத்தும் தேதியிலிருந்து முப் பது நாட்கள் வரை அவகாசம் வழங்க வேண்டும். அனைத்து கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கும் நல வாரி யம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் விடுத்தனர். மேலும் இந்த கோரிக்கைகளை அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கவ னத்திற்கு கொண்டு செல்ல வேண் டும். தற்போது அரசு சார்பில் கல்விக்கு என்று தனி சேனல் ஒளி பரப்பப்பட்டு வருகிறது. இதனை அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் செட்டப் பாக்ஸ் தரப்பட்டு உள்ளது. எனவே ஆப்பரேட்டர்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும் என்றனர்.