சேலம், அக்.23- வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதை அடுத்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் குறித்து சேலத்தில் மாநகர காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆலோசனை கூட்டம் புதனன்று நடைபெற்றது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிர மடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரு கின்றன. இதையடுத்து பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சேலம் மாநகர காவல்துறை, மாநகராட்சி மற்றும் வரு வாய்த்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநக ராட்சி ஆணையாளர் சதீஷ் மற்றும் மாநகர காவல் ஆணை யாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இக் கூட்டத்தில் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தீவிரமடைந்துள்ள பருவமழை பாதிப்புகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தாழ்வான பகுதி களை கண்டறிந்து அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களை அமைக்க வேண்டும். மாநக ராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்துவது குறித்தும், ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால் மீட்பு குழுவினரை தயார் நிலையில் வைப்பது மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற் கொள்ளப்பட்டது.