கோவை, ஜூன் 26- சாத்தான்குளத்தில் தந்தை, மகன் ஆகிய இரு வியாபாரிகளை காவல் துறையினர் அடித்து கொன் றதை கண்டித்து வெள்ளி யன்று வணிகர் சங்க பேர மைப்பின் சார்பில் கடை யடைப்பு போராட்டம் நடை பெற்றது.
தூத்துக்குடி மாவட் டம், சாத்தான்குளத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடைகளை திறந்து வைத்திருந்ததாக கூறி ஜெய ராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து அவர்களை கொடூ ரமாக தாக்கியதில் இருவ ரும் உயிரிழந்தனர்.
இவர் களின் மரணத்திற்கு நீதி கேட்டும், காவல்துறை யினர் தொடர் அராஜகத்தை கண்டித்தும் வெள்ளியன்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கடை யடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட் டத்தில் உள்ள பெரும்பாலான மளிகை கடை கள், டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்கள் அடைக்கப்பட்டன. மேலும், வணிகர் சங்க பேரமைப்பின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிற்பகல் 12 மணி வரை கோவையில் உள்ள ஹோட்டல்கள், பேக் கரிகளும் அடைக்கப்பட்டன.
இதேபோல், மருந்து கடைகளும் காலை 11 மணி வரை அடைக்கப்பட்டு தங்களது எதிர்ப்பை தெரி வித்தனர். இதேபோல், பொள்ளாச்சியில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மளிகை கடை கள், நகை கடைகள், பாத்திர கடைகள் உள் ளிட்ட வியாபார நிறுவனங்கள் அடைக்கப் பட்டுள்ளன. இதனால் மக்கள் கூட்டம் அதி கமாக காணப்படும் சத்திரம் வீதி, கடை வீதி, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பகுதி கள் வெறிச்சோடி காணப்பட்டது.
அவிநாசி
திருப்பூர் மாவட்டம், அவிநாசி மற்றும் சேவூர் பகுதிகளில் மளிகை கடைகள், ஓட் டல்கள், பேக்கரிகள், காய்கறி கடைகள், பர் னிச்சர் கடைகள், இறைச்சி கடைகள், பேன்சி கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந் தன. மேலும், மருந்து கடைகள் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை அடைக்கப்பட்டி ருந்தன.
உதகை
இதேபோல், உதகையில் வியாபாரிகள் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்த னர். இதனால் மார்க்கெட் பகுதிகள் வெறிச் சோடி காணப்பட்டது.
கோபி
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான மொடச்சூர் கரட்டிபாளையம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் செயல்படும் துணிக்கடைகள் நகைக்கடைகள், மளி கைக்கடைகள், உணவகங்கள் மற்றும் பேக் கரி உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.