அவிநாசி, அக்.10- சேவூர் ஊராட்சி மற்றும் சேவூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஊராட்சிகளில் டெங்கு பரவாமல் தடுக்க ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அவிநாசியை அடுத்த சேவூர் ஊராட்சி பகுதியான ராஜவீதி, மாரி யம்மன் கோவில் வீதி, வடக்கு வீதி, ஏரி மேடு, சந்தையப்பாளையம், பாளியக் காடு, ஒச்சாம்பாளையம், பந்தம்பா ளையம், புதுப்பாளையம் உள்பட அனைத்து வார்டு பகுதிகளிலும் சாக் கடை கால்வாய்களை சுத்தம் செய்து, சாக்கடைகளில் கொசு ஒழிப்புக்கு பயன்படுத்தப்படும் பைரத்ரான் மருந்து பவர் ஸ்பேரயர் மூலம் அடிக் கப்பட்டது. மேலும் அனைத்து வீடுக ளிலும் உள்ள உடைந்த, தண்ணீர் தேங் கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் தொட்டிகள், பழைய டயர் கள் போன்றவற்றை துப்புரவு பணி யாளர்கள் அப்புறப்படுத்தி வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்து தெளிக்கப்பட்டது. மேலும், சேவூர் அரசுப் பள்ளிகளிலும் சுத்தம் செய்யப்பட்டது. இதேபோல் போத்தம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது. இந்த தூய்மை பணிகளை அவிநாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி லட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஊராட்சி செயலாளர் கண்ணன் ஆகியோர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.