திருப்பூர், அக். 31 – ரேசன் கடைகளில் ரேசன் பொருட் களைத் தடையின்றி முறையாக வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் வறுமை ஒழிப்பு தின பிரச் சாரம் நடைபெற்றது. கடுமையான விலைவாசி உயர் வைக் கட்டுப்படுத்த வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்முறை யைத் தடுத்து நிறுத்த வேண்டும். அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை வழங்க வேண்டும். சுகாதார சீர்கேடுகளை களைய வேண்டும். பழு தடைந்த தெரு விளக்கு, மின் கம்பங் களை மாற்றி அமைக்க வேண்டும். மேட்டுப்பாளையம் குடிநீரை முறை யாக வழங்க வேண்டும். டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் வறுமை ஒழிப்பு தின பிரச்சாரம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாநகரக்குழு சார் பில் கருவம்பாளையம் மாகாளி அம் மன் கோவில் அருகில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரச்சாரத்திற்கு சங்கத் தின் தெற்கு மாநகரத் தலைவர் பி.மினி தலைமை வகித்தார். மாதர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலா ளர் எஸ்.பவித்ரா, மாவட்டப் பொருளா ளர் ஏ.ஷகிலா, மாவட்டத் துணைத் தலைவர் பி.செல்வி தெற்கு நகரச் செயலாளர் எஸ்.பானுமதி உள்ளிட் டோர் உரையாற்றினர். நிறைவாக தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.