tamilnadu

img

பொள்ளாச்சி இலக்கிய வட்ட சந்திப்பு

பொள்ளாச்சி, ஏப். 30-பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இலக்கிய சந்திப்பு நடைபெற்றது.பொள்ளாச்சி நகரமன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய வட்டத்தின் தலைவர் க.அம்சப்ரியா தலைமையில் 72 ஆவது இலக்கியவட்ட சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிஞர் பிருந்தா பார்த்தசாரதி எழுதிய எண்ணும் எழுத்தும் மற்றும் இருளும் ஒளியும் ஆகிய கவிதைத் தொகுப்புகளை முனைவர் பட்ட ஆய்வாளர் வீ.ரமேஷ் குமார்அறிமுகம் செய்து உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து கவிஞர் க.சி.அம்பிகாவர்ஷினி எழுதிய தேக்குமரப் பூக்களான மீச்சிறு மேகமூட்டம் எனும் கவிதைத்தொகுப்பினை கவிஞர் கோ.லீலா அறிமுகம் செய்து வைத்து பேசினார். இதேபோல் கவிஞர் நேசமித்ரன் எழுதிய துடிக்கூத்து எனும் கவிதை தொகுப்பினை இலக்கிய வட்டத்தின் செயலாளர் இரா.பூபாலன் அறிமுகம் செய்து உரையாற்றினார்.முன்னதாக பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செய்தி மடலினை பொள்ளாச்சி சார் ஆட்சியர் இரவிக்குமார் வெளியிட தலைவர் க.அம்சப்ரியா பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் கவிஞர் சே.கார்த்திகா நன்றி கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.