அவிநாசி, செப். 8- திருப்பூர் மாவட்டத்தில் பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட கதர் கிராம வாரிய கட்டிடங்கள் பயன்பாடின்றி வீணாகி வருகி றது. சேவூர் மற்றும் வடுகபாளை யம், கருவலூர் ஊராட்சிக்குட் பட்ட கிராமங்களில் கதர் கிராம வாரியத்தின் சார்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டது. இதில் பொது மக்களுக்கு குறிப்பாக பெண்க ளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத் தும் வகையில் அம்பர் ராட்டை வழங்கி, கதர் கிராம வாரியத்தின் சார்பில் பஞ்சு வழங்கப்பட்டு, பொதுமக்களிடம் நூலாக பெறப் பட்டு, கூலி வழங்கி வந்தன. மேலும் இந்த நூல் தறி காரர்க ளுக்கு வழங்கப்பட்டு, துணியாக உற்பத்தி செய்யப்பட்டு பெறப் பட்டு வந்தது. இதில் கதர் வேட்டி, சட்டை, துண்டு, சேலைகள் உள் ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதில் காட்டன், பஞ்சு மட்டுமின்றி பாலீஸ்டர் வகைக ளும் வெளிசந்தையில் இருந்து வாங்கி நூல் நூற்புக்கு வழங்கி வரப்பட்டது. மேலும் இந்த கட்டிடத்தில் உள்ளேயே கதர் கிராம நூற்பாலை அமைக்கப் பட்டு நாள்தோறும் 100க்கும் மேற் பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வந்தது. இதன் மூலம் பஞ்சை பட்டை திருத்தி நூலாக உற்பத்தி செய்து வந்த னர். இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் படுக்கை விரிப்பு, துண்டு, சேலைகள் ஆகியன ஆண்டுதோறும் தீபாவளி பண் டிகை மாதத்தில் ரூ.3 லட்சத்திற்கு மேலாக விற்பனை நடை பெற்று வந்தது.
கதர் வாரியத்தை வீழ்த்திய பனியன் தொழில்
இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாவட் டத்தின் தலைநகரமான திருப்பூ ரில் பனியன் உற்பத்தியின் வேகம் அதிகரிக்க தொடங்கியது. மேலும் வெளிநாடுகளுக்கு இங்கிருந்து பின்னலாடைகள் (அனைத்து வகையான உள்ளாடைகள்) வித விதமான மாடல்களில் தயார் செய்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் கதர் கிராம வாரியத் தில் கிடைக்க கூடிய கூலியை விட, பின்னலாடை நிறுவனத் தில் கூலி அதிகமாகக் கிடைத்த காரணத்தால் சிறுக, சிறுக தொழி லாளர்கள் கதர் தொழிலை விட்டு பின்னலாடை தொழிலுக்குச் சென்றனர். இதனால் கதர் வாரியம் முடங் கியது. ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு கதர் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. கதர் வாரியத் திற்கு ஒதுக்கப்பட்ட இடமும், பல கோடி மதிப்பிலான கட்டிடங்கள் அனைத்து பகுதிகளிலும் பய னின்றி இருக்கிறது.
சேவூர் மற்றும் வடுகபாளையம் கருவலூர் கிராமங்கள்
இதன் ஒரு பகுதியாக சேவூர் கைகாட்டி ரவுண்டானா அருகில், கருவலூர்,வடுகபாளையம், ஆதி திராவிடர் காலனி, பிச்சாண்டாம் பாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த கதர் கிராம வாரி யத்தின் செயல்பாடுகள் பின் தங்கி யது. நாளடைவில் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இவ்வாறு 20 வருடங்களுக்கு மேலாகியும் எந்த ஒரு பயன்பா டும் இல்லாமல் ஏக்கர் கணக்கில் கட்டிடங்களுடன் காலியிடங்கள் புல் முளைத்து, புதர் மண்டி வீணாகி வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறும் போது :- பலகோடி மதிப் பிலான கட்டிடங்கள் புதர் மண்டி வீணாகி வருவது வேதனை அளிக்கிறது. எனவே இக்கட்டி டங்களை சீரமைத்து பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக் கையாக உள்ளது.