tamilnadu

திருப்பூரில் கலவரத்தைத் தூண்ட முயல்வோருக்கு பாதுகாப்பா?

அமைதியைப் பாதுகாக்க மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தல்

திருப்பூர், பிப். 28 – கலவரத்தைத் தூண்டும் நோக் கில் போராட்டத்தில் ஈடுபடுவோ ருக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கும் காவல்துறை, ஜனநா யகப் போராட்டங்களுக்கு அனு மதி மறுக்கிறது. திருப்பூரின் சட்ட ஒழுங்கு, அமைதியைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மதசார்பற்ற முற்போக் குக் கூட்டணி கேட்டுக் கொண்டுள் ளது. திருப்பூர் நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பராயன், திமுக மாவட்டச் செயலாளர் க.செல்வ ராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், மதிமுக நிர்வாகி மு.சம்பத், முஸ்லிம் லீக் தலைவர் சையது முஸ்தபா, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஏ.நசீர் தீன், த.பெ.தி.க நிர்வாகி இல.அங் ககுமார், கொமதேக ஏ.ஆனந்தகு மார் உள்ளிட்டோர் கையெழுத் திட்டு ஆட்சியருக்கு வழங்கிய கடி தத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு இயற்றியுள்ள சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங்கள் அரசியல் சாசன அடிப் ப்படைகளுக்கு முற்றிலும் எதி ரானது, இதை எதிர்த்துப் போரா டும் உரிமை ஒவ்வொரு குடிமக னுக்கும் உண்டு. இந்த அடிப்படை யில் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டங்களுக்கு எதிராக மிக அமைதியான முறையில் லட்ச க்கணக்கான மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தி லும் அமைதியான வழியில் போராட்ட இயக்கங்கள் நடை பெற்று வருகின்றன.

ஆனால் இந்த போராட்டங்க ளுக்கு எதிராக போட்டிப் போராட் டங்களை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே நடத்துகின்றனர். மத்திய, மாநில அரசுகளோ, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களோ போட்டிப் போராட்டக்காரர்களை ஆயுதமாக பயன்படுத்தி வன்மு றையை ஏவிவிட்டுள்ளது மிகவும் கவலையளிக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஜனநா யக இயக்கங்களும், சிறுபான்மை இயக்கத்தினரும், பெரியாரிய இயக்கத்தினரும் அமைதி வழியில் போராட்டங்களை நடத்துவதற்கு, காவல் துறை அனுமதி தர மறுக்கிறது. ஆனால் எவ்வித அனுமதியும் இல்லாமல் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீர் திடீரென போராட்டங்களை நடத்துகின்றனர். கடைகளை அடைக்க வலியுறுத்தி வன்முறை யில் ஈடுபடுகின்றனர். தற்போது திருப்பூர் புஷ்பா திரையரங்கம் எதிரில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தையே மறைத்து பள்ளி மாணவ, மாணவி யர்களுக்கும், பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக மிகப்பெ ரும் கூடாரத்தை அமைத்துக் கொண்டு அங்கு ஒலிபெருக்கி வைத்துக் கொண்டு வன்முறையை தூண்டும் விதமான நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு காவல் துறை அனுமதி அளித்ததுடன் மிகுந்த பாதுகாப் பும் வழங்கி வருகிறது.

காவல் துறை எந்த சட்ட ஷரத் தின் அடிப்படையில் இந்து முன்ன ணியினருக்கு மட்டும் இந்தத் தொடர் அனுமதியை வழங்கியுள் ளது என்பதைத் தெரிவிக்க வேண் டும். மேலும் மற்றவர்களுக்கு எந்த சட்ட ஷரத்தின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்படுகிறது. புஷ்பா திரையரங்கம் எதிரில் போராட்டம் நடத்தும் இந்து முன் னணியினர் தில்லியில் நடை பெற்ற வன்முறைக் கலவரத்தைப் போல் திருப்பூரிலும் நடத்துவ தற்கு திட்டமிட்டுள்ளார்களோ என்ற ஆழமான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வன் முறைக் கலவரத்தைத் தூண்டும் உள்நோக்கத்துடன்தான் இந்து முன்னணி அமைப்பினர் இத்த கைய நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளனர் என்பது அவர்களது நட வடிக்கையின் மூலம் தெரிய வரு கிறது.

இதனால் திருப்பூர் மாவட்டத் தில் சட்டம் ஒழுங்குச் சீர்கெட்டு மிகப்பெரும் கலவரம் ஏற்படுவதற் கும், உயிர்களுக்கும், உடமைக ளுக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்ப டுவதற்குமான ஆபத்தும், வகுப்புக் கலவரங்கள் திருப்பூரில் வெடித் தால் உள்நாட்டு பனியன் வணி கம், ஏற்றுமதி பனியன் வணிகம் ஆகியவற்றை நாம் முற்றாக இழந் துவிடும் ஆபத்துள்ளதை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்கூட்டியே எச்சரிக்கின்றோம். மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உடனடியாக கலவரத் தைத் தூண்ட முயற்சிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உரிய நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுக்காதபட்சத் தில் இம்மாவட்டத்தில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதற்கு மாவட்ட நிர்வாகமும், மாவட்ட, மாநகர காவல் துறை ஆகியவையும்தான் முழுப்பொ றுப்பேற்க்க வேண்டும். மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகி யவற்றுக்கு எதிராக ஜனநாயக முறையில் அமைதி வழியில் போராட்டம் மற்றும் இயக்கங் களை நடத்துவதற்கு காவல் துறை உரிய அனுமதியளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள னர்.