tamilnadu

img

சின்னார் சூழல் சுற்றுலா அறிமுகம்

உடுமலை, நவ.30- ஆனைமலை புலிகள் காப்ப கம், அமராவதி வனச்சரகத் திற்குட்பட்ட சின்னார் வனப்பகுதியில் சூழல் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதன்துவக்க நிகழ்வு வெள்ளியன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வன அலுவலர் பி.கே.திலீப், உதவி வன அலுவலர் கணேஷ்ராம், அமராவதி வனச்சரகர் முருகேசன் மற்றும் இயற்கைக் கான உலகளாவிய  நிதியத்தின் இந்தியா நிர்வாகிகள் பங்கேற்று சூழல் சுற்றுலாவைத் தொடங்கி வைத்தனர். இச்சூழல் சுற்றுலா தளிஞ்சி சூழல் மேம்பாட்டுக்குழு  வனத்துறை உதவியுடன் நடத்தப்படுகிறது. மேலும், மலைவாழ் மக்கள் மரபு கட்டிடம் மற்றும் சூழல் சுற்றுலா பொருட்கள்  தளிஞ்சி ஊர் மக்களிடம் வழங்கப்பட்டது. இந்த சுழல் சுற்றுலாவில் வனப் பகுதியில் நடைப்பயணம், ஆற்று ஓரமாக கூட்டாரில் பரிசல் ஓட்டம் மற்றும் சிற்றுண்டி, மதிய உணவு என ஒரு நாள் முழுவது மான இயற்கையுடன் இருக்கலாம்.  இச்சூழல் சுற்றுலா பொதுமக்களுக்கு மட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், இயற்கை, வனம், வன விலங்கு கள், பறவைகள், மரங்கள், வண்ணத்துப் பூச்சிகள் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் சின்னார் மற்றும் அதன் நீர் பிடிப்புப்பகுதி பற்றி அறிந்து கொள்ள வசதி செய்யப் பட்டுள்ளது. எனவே, சின்னார்  சூழல் சுற்றுலா செல்ல விரும்புவோர் www.chinnarnaturetrail.com இணையதளத்திற்கு சென்று பதிவு  செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.