tamilnadu

img

ஒருங்கிணைந்த உரிமையியல் நீதிபதி பதவி

போட்டித் தேர்விற்கான முன்னேற்பாடு குறித்த கூட்டம்

சேலம், நவ.20- சேலம் மாவட்டத்தில்,  ஒருங்கிணைந்த உரிமையியல் நீதிபதி பதவி போட்டித் தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதனன்று நடைபெற்றது.   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் மூலம் நடைபெற உள்ள ஒருங் கிணைந்த உரிமையியல் நீதிபதி (Civil Judge) பதவிக்கான போட்டித்தேர்வு  வரும் நவ.24ஆம் தேதியன்று நடைபெறுகி றது. இத்தேர்வு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் புதனன்று  நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். குமரகுரு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன்  முன்னிலை வகித் தார்.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  பேசியதாவது, தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த உரிமையியல் நீதிபதி (Civil Judge) பதவிக்கான போட்டித்தேர்வு  சேலம் மாவட்டத்தில் ஞாயிறன்று காலை  10மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடை பெறவுள்ளது. இப்போட்டித்தேர்வு  ஸ்ரீசக்தி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 2 அறைகளில் 412 பேர் தேர்வு  எழுதவுள்ளனர். இத்தேர்வினை முழுமை யாக கண்காணித்து பதிவு செய்திட ஒரு  அறைக்கு 2 சி.சி.டி.வி கேமராக்கள் வீதம்  2 அறைகளுக்கும் 4 சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும், இம் மையத்தில் 2 வீடியோ கேமிராக்கள் மூலம் பதிவு செய்து கண்காணித்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வினை எழுத உள்ளவர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய தேர்வு நுழைவுச் சீட்டினை (Hall  Ticket) இணையதளம் வாயிலாக பதி விறக்கம் செய்து தேர்வு மையத்திற்கு எடுத்து  வரவேண்டும். 

தேர்வு நுழைவுச் சீட்டில் புகைப் படம் இல்லாமல் இருப்பின் அத்தகைய தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை  நகல் அல்லது ஓட்டுநர் உரிமம் நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல்  ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அரசிதழ்  பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazetted Officer) ஒப்பம் பெற்று எடுத்து வர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நுழைவுச் சீட்டு இல்லாதவர்கள் தேர்வு எழுத  அனுமதிக்கப்படமட்டாது. எனவே,  இப்போட்டித் தேர்வினை எழுதவுள் ளவர்கள் அனைவரும் கட்டாயம் தேர்வு நுழைவு சீட்டுடன் தேர்வு மையத்திற்கு  ஞாயிறன்று  காலை 9 மணிக்குள் வருகை தரவேண்டும். தேர்வு மையத்தில் கைப்பேசி (Cellphone), கால்குலேட்டர் உள்ளிட்ட எவ்வித எலக்ட்ரானிக் பொருட்களும் பயன் படுத்த அனுமதிக்கப்படமாட்டாது. இவ் வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் டி.முனுசாமி, மாவட்ட  வருவாய் அலுவலர் இரா.திவாகர், மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், மாநகர காவல் உதவி ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தங்க துரை உள்ளிட்ட தொடர்புடைய அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.