tamilnadu

தீவனம், தண்ணீர் தட்டுப்பாட்டால் மாடுகள் விற்பனை அதிகரிப்பு

ஈரோடு, ஜூலை 4- மழை இன்றி, பசுந்தீவனம் பற்றாக் குறை மற்றும் தண்ணீர் பிரச்சனையால் ஈரோடு மாட்டு சந்தைக்கு அதிக எண்ணிக் கையில் மாடுகள் விற்பனைக்காக வந்தது. ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு  சந்தைக்கு புதனன்று கரூர், ஈரோடு, திருப் பூர், கோவை, சேலம், நாமக்கல், திண்டுக் கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப் பாட்டால், அதிக எண்ணிக்கையில் மாடு கள் விற்பனைக்காக வந்தன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, மகராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் மற் றும் வியாபாரிகள் மாடுகளை வாங்க அதிக மாக வந்தனர்.  மாடுகள் விற்பனை குறித்து, சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறுகையில், மாடு மற்றும் கன்றுகள் அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்தன. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடும், தீவ னம், பசுந்தீவனம் போன்றவை தேவை யான அளவு கிடைக்கவில்லை என்பதா லும், விற்பனைக்குக் கொண்டு வந்தனர். தமிழகத்தைவிட, பிற மாநிலங்களில் ஓரளவு மழை பெய்ததுடன், தண்ணீர் இருப்பு உள் ளதால், அங்குள்ள வியாபாரிகள், விவசாயி கள் மொத்தமாக மாடுகளை வாங்கி செல் கின்றனர்.   வரத்தான மாடுகளில், 90 சதவிகி தம் விற்பனையானது. மூன்று கோடி ரூபாய்க்கு மேல், விற்பனை நடந்துள்ளது.பருவமழை வரும் வரையிலும், பாசனத் துக்கு தண்ணீர் திறப்பு துவங்கும் வரை, இதே நிலை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். சந்தையில் 12,000 ரூபாய் முதல் 38,000 ரூபாய் வரையிலான விலையில் 300 பசுக்கள்,  2,000 ரூபாய் முதல், 12,000 ரூபாய் வரை யிலான விலையில், 350 கன்றுகள், 14,000 ரூபாய் முதல், 48,000 ரூபாய் வரை யிலான விலையில், எருமை மாடுகள் விற் பனைக்கு வந்தன.