தருமபுரி, ஆக.25- இதயம் சமூகநல அறக் கட்டளை மற்றும் தஞ்சை திருக்குறள் விழிப்புணர்வு குழு சார்பில் முப்பெரும் விழா தருமபுரி செங்குந்தர் திருமணமண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கவிஞர் ஆவடிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ. குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலகுழு உறுப்பினர் நாகைபாலு, கற்பவிருட்சம் மாத இதழ் ஆசிரியர் மருத்துவர் கோ. முனிபாபு, சுவாமி விவேகானந்தா அறக் கட்டளை தலைவர் பி.என்.குருராவ், கம்பன் கழகம் நிறுவன தலைவர் தகடூர் இரா. வேணுகோபால்,ஆகியோர் சிறப்புரை யாற்றினர். திருக்குறள் மகத்துவம் குறித்து கலைக்கூடம் நிறுவனர் கவிஞர் உதய நகலவு பேசினார். முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு இதயம் சமூக நல அறக்கட்டளை மாநிலத் தலைவர் க.சிங்காரவடிவேல் வரவேற்றார். விழாவில் மணப்பாறை சு.விவவக்ஐயரின் குப்பை புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும் சாத னையாளர்களுக்கு பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது. சுபஜுவம் நாட்டி யாஞ்சலிப் பள்ளியின் கலைநிகழ்ச்சி நடை பெற்றது. நிறைவாக, ம.சரிதா சிங்கார வடிவேல் நன்றிகூறினார்.