மேட்டுப்பாளையம், ஆக.8- கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து நடத்தும் சூழல் சுற்றுலா மறு தேதி அறிவிக்கப்படாமல் ரத்து செய்யப் படுவதாக வனத்துறையினர் அறிவித் துள்ளனர்.a இயற்கை எழில் மிகுந்த மலைக்காட் டின் நடுவே தமிழக - கேரள எல்லையோ ரத்தில் அடர்ந்த வனத்தின் நடுவே அமைந் துள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியின் கரையோரத்தில் படகு இல்லம் அமைக்கப்பட்டு நடத்தப்படும் இந்த சூழல் சுற்றுலாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராள மான சுற்றுலா பயணிகள் வருகை தரு கின்றனர்.
இயற்கையுடன் ஒரு நாள் இணைந்தி ருக்க விரும்புவோர் பலரும் வனத்துறையி டம் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். வார விடு முறை நாட்களில் நடத்தப்படும் இச்சூழல் சுற்றுலாவில் காட்டின் நடுவே ஓடும் ஆற் றில் பரிசல் பயணம், ஆற்றுக்குளியல், பழங் குடியின மக்கள் தயாரித்து வழங்கும் சுவை யான இயற்கை உணவு, ட்ரக்கிங் ஆகி யவை வனத்துறையினரின் கண்காணிப் பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக குறிப்பாக அணையின் நீர்ப்பி டிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளக் காடுகளில் பெய்து வரும் கனமழை காரண மாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. இதனால் பில்லூர் அணை முழு கொள் ளளவை எட்டி நிரம்பி அதன் உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சூழல் சுற்றுலாவின் படகு இல்லப்பகுதி மற்றும் இதன் சுற்றுப் புற இடங்கள் அனைத்தும் நீருக்கடியில் மூழ்கிப்போனது. சூழல் சுற்றுலா நடத்தப் பட்டு வந்த பரிளிக்காடு பகுதி முழுவதும் தற்போது வெள்ளக்காடாக காட்சியளிப்ப தால் வனத்துறையினர் சூழல் சுற்றுலாவை மறுதேதி அறிவிக்கப்படும் வரை ரத்து செய் வதாக அறிவித்துள்ளனர். மேலும், கேரள வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் எப்போது நீர்வரத்து குறையும் என தெரியாத காரணத்தினால் மறு தேதி அறி விக்கும் வரை பரளிக்காடு சூழல் சுற்றுலா வின் முன்பதிவும் நிறுத்தி வைக்கப்படுவ தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.