tamilnadu

img

ஈரோடு பூம்புகார் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் விற்பனை

ஈரோடு, மே 10-ஈரோடு பூம்புகார் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் விற்பனையகத்தில் கோடை விற்பனை துவங்கியுள்ளது.ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் பூம்புகார் கைவினைப் பொருட்கள், மதிப்புக் கூட்டுப் பொருட்கள் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இதில் மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. கோடை வெயில்அதிகரித்து இருக்கும் நிலையில் தண்ணீரை குளிர வைக்க மண்ணால்செய்யப்பட்ட ஜாடி, குவளை, குடுவை,ஜக்கு போன்றவைகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், பூம்புகாரில் மண் சிலைகள், மர சிலைகள், வெங்கல பொருட்கள், போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கோடை விடுமுறையில் பொது மக்களுக்கு உதவும் வகையிலும், பிளாஸ்டிக் பயன்படுத்தாத வகையிலும் மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இங்கு மண் பொருட்கள் ரூ.45 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது.