சேலம், ஆக. 4 - எல்ஐசி பிரிமியம் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க சேலம் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் பொது மாநாடு வலி யுறுத்தியுள்ளது. அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட 29ஆவது மாநாடு சேலம் குஜராத்தி மண்டபத்தில் ஞாயி றன்று தொடங்கியது. மாநாட் டிற்கு சேலம் கோட்ட தலைவர் எஸ்.லட்சுமி சிதம்பரம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஏ.கலியபெருமாள் வரவேற் றார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார் துவக்கவுரையாற்றினார். துணைத்தலைவர் கே.சுவாமி நாதன், ஆர்.தர்மலிங்கம் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இதில் எல்ஜசி பிரிமியத் திற்கு வருமான வரி விலக்கு தனியாக வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் துறையில் நூறு சதவிகிதம் அந்நிய முதலீட்டு உயர்வு திட்டம் வாபஸ் பெற வேண்டும். சேலம் உருக்காலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவ னங்களைத் தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக பொது மாநாட் டில் பணி ஒய்வு பெற்றவர்கள் மற்றும் அம்பேத்கர் பயிற்சி மையத்தின் ஆசிரியர்கள் கௌர விக்கப்பட்டனர். காப்பீட்டு கழக ஊழியர் சங்க துணைத் தலைவர் ஆர்.ரவீந்திரன் நன்றி கூறினார். மேலும் மாநாடு திங்க ளன்று(இன்று) தொடர்ந்து நடைபெறுகிறது.