tamilnadu

img

ஆவின் மற்றும் கரும்பு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்

ஈரோடு, ஜூலை 26- ஆவின் மற்றும் கரும்பு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என வேளாண் குறைதீர் கூட்டத் தில் விவசாயிகள் வலியுறுத்தினர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று நடைபெற் றது. மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். அப்போது, பெருந்துறை சிப்காட் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்ட பொடாரன் குளிர்பான ஆலை, கீழ் பவானி பகுதியான நத் தக்காடையூர் பகுதியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. எனவே விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் நிலையில், அந்த  ஆலை அமைக்கப்படாமல் உடனடி யாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஆவின் மற்றும் கரும்புசர்க்கரை ஆலையில் இருந்து விவசாயிகளுக்குக் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக நிலுவைதொகை விநியோகிக் கப்பட வில்லை. எனவே இதனை உடனடியாக வழங்க செய்ய வேண் டும். வேளாண் இடுபொருட்களை மானிய விலையில் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் கொடிவேரி மட்டும் காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறக்கப்படாததால் முதல்போக சாகுபடி நடைபெற வில்லை. தற்போது 2ஆம் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண் டும். ஆனால் குடிநீர் பயன்பாட்டிற்கு என 1,300 கனஅடி நீர் தண்ணீர் திறக் கப்படுகிறது. இந்த தண்ணீரானது சாய ஆலைகளுக்கும், தொழிற்சாலை களுக்கும் அனுமதியின்றி எடுக்கப் படுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். விவசாய நிலங்களில் வீட்டு மனை கள் கட்டப்படுவதற்கு தடையில்லா சான்று (NOC) வழங்கிய பின்னரே கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். பூச்சிக் கொல்லி மருந்துகள் விலை அதிகரித்துள்ள நிலையில், மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிங்கராயன் பாசன பகுதிகளில் விளைந்த பொருள்களை கடைமடையில் இருந்து மேலே உள்ள கரைக்குக் கொண்டு வர சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் சார்பில் அமைக்கப்பட்ட தார்சாலை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்ப டைக்கப்பட்டிருந்த நிலையில் தனி நபர்கள் ஆக்கிரமித்து கிணறு அமைத்து தண்ணீரை எடுத்து அதிலிருந்து அரு கில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விற் பனை செய்து வருவது தடுக்கப்பட வேண்டும். மேலும், அப்பகுதியில் செங்கல் சூளைக்கு மண் அள்ளப்பட்டு வருகிறது. நான்கு புறமும் 6 அடி நீள மும் 15 அடி முதல் 20 அடி ஆழம் வரை மண் எடுக்கப்படுகிறது. இதனால் அருகில் உள்ள நிலங்களில் கரை உடைந்து பயிர் செய்ய முடியாமலும், தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே இது தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினார்கள். கோபி இதேபோல், கோபி கோட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத் தில் முதல் முறையாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட் சியர் ஜெயராமன் தலைமையில் நடை பெற்றது.

இதில் கோபி, பவானி, அந்தியூர், நம்பியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகிய தாலுகாக் களிலிருந்து 50க்கும் மேற்பட்ட விவசா யிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் குண்டேரிப்பள்ளம் அணையை தூர் வார வனத்துறை, பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அனு மதி வழங்க வேண்டும். பாசனத்திற் காக கட்டப்பட்ட கொடிவேரி அணை தற்போது சுற்றுலாத் தலமாக மாறியுள் ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.80 லட்சம் வரை வருவாய் வருகிறது. இவ்வருவாய் மூலம் கொடிவேரி அணை கட்டுமானத்தை பராமரிக்க வும், வாய்க்கால்களை மேம்படுத்தவும் மற்றும் சுகாதாரத்திற்கும் செல வழிக்க வேண்டும் என்று விவசாயி கள் கோரிக்கை வைத்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.  மேலும், வனப்பகுதியில் வெட்டப் பட்டுள்ள அகழிகள் மண் சரிந்து மூடி யுள்ளதாகவும் அதனால் மீண்டும் அக ழியை ஆழப்படுத்த வேண்டும் என்றும், யானைகள் விளை நிலங்களுக்குள் வராமல் தடுக்க சோலார் விளக்கு அமைக்க வேண்டும் என்றும் வேண்டு கோள் விடுத்தனர். இதுகுறித்து 15 நாட் களுக்கு துறை ரீதியான நடவடிக்கை கள் எடுக்க கோட்டாட்சியர் உத்தர விட்டார்.