கோவை, ஜூலை 4- ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீடு களை கோவை மாநகராட்சி அதி காரிகள் வியாழனன்று அகற்றினர். கோவை உக்கடம் பகுதியில் வாளாங்குளம் கரையை ஒட்டி மஜித் காலனி அமைந்துள்ளது. ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ள இந்த மஜித் காலனி குடியிருப்புகள் 30 ஆண்டுக ளுக்கு மேலாக இருந்து வந்தது. இந் நிலையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் மஜித்காலனி யில் வசித்து வந்த ஆக்கிரமிப்பா ளர்கள் அனைவருக்கும் வெள்ளளூர், உக்கடம் கழிவுநீர் பண்ணை, மலு மிச்சம்பட்டி பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மாற்று வீடுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்த பெரும்பாலான மக்கள் மாற்று வீடுகளுக்குக் குடி பெயர்ந்தனர். ஆக்கிரமிப்பு குடியிருப் புகளுக்கு மின் இணைப்புத் துண்டிக் கப்பட்ட நிலையிலும், ஒரு சில குடும்பத்தினர் மட்டும் அந்தக் குடி யிருப்புகளில் வசித்து வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி அதி காரிகள் காவல் துறையினர் உதவி யுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு ஆக்கிரமிப்பு வீடுகளில் வசித்து வரும் ஒரு சிலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தங்களுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வழங்கப்பட்டுள்ள வீடு வசதியாக இல்லை எனவும், அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த வீடுகளை இடிப்பது தங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், போதிய கால அவகாசம் வழங்கப்பட்டு மாற்று வீடுகள் வழங்கப்பட்டு முறைப்படி ஆக்கிரமித்து வீடுகள் அகற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.