tamilnadu

img

உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்

உடுமலை, செப். 27- உடுமலையில் மாற்றுத்திறனாளி களுக்கான குறைதீர்க்கும் நாள் முகாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது.  உடுமலை, மடத்துக்குளம் தாலு காக்களை உள்ளடக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் உடுமலையில் நடைபெற்றது. வருவாய் கோட்டாட் சியர் இந்திரவள்ளி தலைமையில், வட்டாட்சியர் தயானந்தன், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் கிருஷ்ண வேணி முன்னிலையிலும் முகாம் நடைபெற்றது.  இம்முகாமில்  கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்து வர்களால் பரிசோதனை செய்யப் பட்டு குறைபாடுகள் குறித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.  புதிய அடையாள அட்டை, உதவித்தொகை, வேலை வாய்ப்பு, செயற்கை உபகரணங்கள், மூன்று சக்கர சைக்கிள் கேட்டு 63 மனுக்கள் பெறப்பட்டது. மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் சந்திரசேகர், இளநிலை வேலை வாய்ப்பு அலு வலர் நாகராஜ் ஆகியோர் மனுக்களை பெற்றுக்கொண்டனர். இதில் 22 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக் கான புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.