tamilnadu

img

தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு அனுமதி மறுப்பு மாவட்ட ஆட்சியர் தலையிட பி.ஆர்.நடராஜன் எம்பி., வலியுறுத்தல்

கோவை, ஆக. 24- பிரசவத்திற்காக  வரும்  கொரோ னாவால் பாதிக்கப்பட்ட நிறை மாத கர்ப்பிணிப் பெண்களை கோவையில் உள்ள தனியார் மருத் துவமனைகள் அனுமதிக்க மறுக் கும் போக்கு அதிகரித்து வரும் விவ காரத்தில் உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும் என கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது, கோவை மாவட்டத் தில் உள்ள மிக முக்கியமான தனி யார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்ட நிறை மாத கர்ப்பிணிகளைப் பிரசவத் திற்கு அனுமதிக்க மறுக்கிறார்கள் என்கிற புகார் தொடர்ந்து என்னுடைய கவனத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்கையில், எங்களிடம் வரும் கர்ப்பிணிகள் ஆரம்பத்தில் இருந்து எங்கள் மருத்துவ ஆலோசனைப் பெறா தவர்கள். ஆகவே இவர்களின் நிலை குறித்து எங்களுக்குத் தெரியாமல் எப்படி பிரசவம் பார்ப் பது என்கிறார்கள். மேலும் அழுத் தம் கொடுத்தால் இங்கு இட மில்லை என்கிறார்கள். இதுகுறித்து மேலும் விசாரிக் கையில், மகப்பேறு மருத்துவர் கள் பணியாற்றும் தனியார் மருத் துவமனையில் கொரோனா வார்டு இல்லாததே காரணம் என்பது தெரி யவருகிறது.

இரட்டை உயிர்கள் சம்பந்தப்பட்ட நிறைமாத கர்ப்பி ணிகள் விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகளின் செயல் மிக வும் ஆபத்தான போக்காகும். இதனை மாவட்ட ஆட்சியர் அவசி யம் கருதி உடனடியாக தலை யிட்டு தக்க நடவடிக்கை எடுப்ப தோடு தனியார் மருத்துவமனை களில் கொரோனா வார்டுக்குத் தேவையான தனி ஏற்பாடுகளை மருத்துவர்களின் ஆலோசனை களைப் பெற்று செய்ய வேண் டும், இவ்வாறு அவர் குறிப்பிட் டுள்ளார்.