சேலம், ஜூன் 18- சேலம் அருகே தாதம் பட்டியில் புதிதாக செல் போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்தக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், வீரா ணம் முதன்மைச் சாலையில் உள்ள தாதம்பட்டி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைப்பதற்கு பணி கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஒரு செல்போன் டவர் அந்த பகுதியில் அமைந்துள்ள நிலையில் அதிலிருந்து வெளிப்படும் மின்காந்த அதிர்வலை களால் அப்பகுதிமக்கள் பல்வேறு பாதிப் புக்கு உள்ளாகி வந்துள்ளனர். எனவே அப் பகுதியில் புதிதாக அமைய உள்ள செல் போன் டவரை தடுத்து நிறுத்தக்கோரி திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.