அவிநாசி, ஆக. 2- அவிநாசியை அடுத்த நம்பியாபாளையத்தில் சாலையில் தீடீரென மின் கம்பம் விழுந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. அவிநாசி ஒன்றியம், நம்பியாபாளையம் ஊராட்சிக் குட்பட்ட ஆர்.ஆர்.மஹால் அருகில் கடந்த சில நாட்க ளுக்கு முன் கன்டெய்னர் லாரி கடந்து செல்லும்போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது உரசியது. இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில், மின் கம்பம் மட்டும் சேதமடைந்தது. இந் நிலையில் சேதமடைந்த கம்பத்தை மின்வாரியத்தினர் சரி செய்யாமல் அப்படியே விட்டே நிலையில் வெள்ளியன்று தீடீரெனெ சாலையில் மின்கம்பம் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.