உடுமலை, ஆக. 22- படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் ஊழல் நடைபெற் றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. உடுமலை மற்றும் மடத்துக் குளம் பகுதியில் கடந்த வருடம் பயிரிடப்பட்ட மக்காசோளம் படைப்புழு தாக்குதலால் கடுமை யாகப் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண் டும் என்று கோரிக்கை எழுந்தது. விவசாய சங்கத்தின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டது. இந்நிலை யில், உடுமலை மற்றும் மடத் துகுளம் தாலுகாவிற்குட்பட்ட விவசாயிகளின் குறை தீர் கூட்டம் வியாழனன்று வருவாய் கோட் டாட்சியர் இந்திரவள்ளி தலைமை யில் உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவ சாயிகள், உடுமலை மற்றும் மடத் குகுளம் பகுதியில் வருவாய் துறை மற்றும் வேளாண்துறை அதிகாரி கள் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக நிவாரண தொகையை வழங்காமல், விவசாயிகளிடம் லஞ்சப் பணம் பெற்றுக்கொண்டு நிவராணம் வழங்குவதாக குற்றம் சாட்டினார்கள். மேலும், தமிழக அரசு கடந்த வாரம் பால் கொள் முதல் மற்றும் விற்பனை விலை களை உயர்த்திய நிலையில், இன் னும் ஆவின் நிறுவனத்தில் கொள் முதல் விலை உயர்வு தொடர் பாக அறிவிப்பு வரவில்லை. ஆனால் தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல், விற்பனை விலையை உயர்த்தி பொதுமக்களி டம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்றனர். உடுமலை அரசு கல்லூரி முதல் வெஞ்சமடை வரை உள்ள பிஏபி வாய்க்கால் கரைகளில் தமிழகத் தில் எங்கும் இல்லாத வகையில் சில தனியார் ரியல் எஸ்டேட் முத லாளிகளின் நலனுக்காக தார் சாலைகள் அமைக்க அனுமதி வழங்கிய பொதுப் பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் தங்க ளின் விளை நிலங்களுக்குச் செல்ல ஏன் அனுமதி மறுக்கிறார்கள் எனக் கண்டனம் தெரிவித்தனர். இயற்கை ஏழில் மிக்க பகுதியாக உள்ள பாலாற்றில், கடந்த ஐந் தாண்டுகளுக்கு மேல் சட்ட விரோ தமாக மணல் திருட்டில் ஈடுபட்ட அனைத்து சமூக விரோதிகள் மற் றும் அவர்களுக்கு துணையாக இருந்த வருவாய் மற்றும் பொது பணித்துறை அதிகாரிகளை மீது நீதி மன்ற வழிகாட்டுதல் படி குண் டர் சட்டத்தில் கைது செய்ய வேண் டும். தற்போது உடுமலை பகுதியில் விவசாய பணிகளுக்கு வண்டல் மண் எடுக்க அரசு பல்வேறு நிபந் தனைகளுடன் அனுமதி வழங்கிய நிலையில், இன்று வரை வண்டல் மண் எடுக்கும் லாரி அதிபர்கள் அர சின் நிபந்தனைகளை மதிக்காமல் வண்டல் மண் எடுப்பதையும், மடத் துகுளம் தாலுகா, மைவாடி பகுதி யில் அரசின் அனுமதி எதுவும் இல் லாமல் வருவாய் துறை அதிகாரி களின் துணையுடன் கிராவெல் மண் எடுப்பதை தடுக்க வேண்டும். இதேபோல், குடிமங்கலம் ஒன்றியத்தில் தென்னை மறு நடவு திட்டத்தில் பெரிய அளவில் ஊழல் செய்த அதிகாரிகள் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவாயிகளுக்கு விவ சாய கடன் அட்டை வழங்குவதில் வேளாண் கூட்டுறவு வங்கி அதி காரிகள் ஆளும் கட்சி உறுப்பின ருக்கு மட்டும் முன்னுரிமை தருகி றார்கள். மேலும் இந்த அட்டை யில் எவ்வளவு தொகை விவசாய கடன் பெற முடியும் என்பதை வங்கிகள் முன்பு அறிவிப்பு பலகை யில் தெரியப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதணன், உடுக்கம்பாளையம் பரமசிவம், ஸ்ரீதர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செளந்தர்ராஜன், ஜல் லிபட்டி கோபால் உள்ளிட்ட திர ளான விவசாயிகள் கலந்து கொண் டனர்.