tamilnadu

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் மாணவிக்கு கொரோனா தொற்று

கோவை, ஜூன் 8- கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் படிப்பு பயிலும் மாண விக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவையில் கடந்த சில வாரங்க ளாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அதன் பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த ஞாயிறன்று கோவை அரசு மருத்துவமனையில் பிசி யோதெரபி வார்டில் பணிபுரியும் ஊழி யர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இச்சூழலில் திங்களன்று கோவை அரசு மருத்துவ மனையில் செவிலியர் படிப்பு பயிலும் 19 வயது மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப் பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், கடந்த 5ம் தேதியன்று திருப்பூ ரில் இருந்து கோவைக்கு வந்துள் ளார். இதையடுத்து இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டு முடிவுகள் திங்களன்று வெளி யாகியது. இதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் தங்கியிருந்த செவிலியர் விடுதி முதல் தளம் மூடப்பட்டது. அங்கிருந்த மாண வர்கள் அனைவரும் அருகில் உள்ள மாணவர்கள் இருக்கும் அறைக்கு மாற் றப்பப்பட்டுள்ளனர்.

மேலும் அவரு டன் இருந்த 40 செவிலியர் மாணவிக ளுக்கு கொரோனா வைரஸ் பரி சோதனை மேற்கொள்ளப்பட்டுள் ளது. இவ்வாறு கோவை அரசு மருத்து வமனையில் கொரோனா வைரஸ் தொற்று அடுத்தடுத்து உறுதி செய்யப் பட்டுள்ளதால் மருத்துவமனை ஊழி யர்கள் மற்றும் மாநகர மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.