திருப்பூர், நவ. 30- வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்க ளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தமிழகத்தில் வெங்காய விலை யானது ரூ.150க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலை யில், வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத அரசுகளைக் கண் டித்து வேலம்பாளையம் ரங்கநாத புரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு பி.செல்வி தலைமை வகித் தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல் காந்தி நகரிலும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.