திருப்பூர், பிப். 7- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட அளவிலான இந்தியா திறன் 2020 போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் க.விஜய கார்த்திகேயன் வழங்கினார். திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான 6 துறைகளில் உள்ள 23 திறன் பிரிவுகளுக்கு 1682 திறனாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் தனித்திறன் பெற்றவர்களை தேர்ந்தெ டுக்கும் விதமாக கடந்த ஜன.20 முதல் 31 ஆம் தேதி வரை தாராபுரம் அரசு ஐடிஐ, அரசு பொது மருத்துவமனை, நிப்டீ, ஜெய் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரி, உடுமலைப்பேட்டை ஹந்துஸ்தான் ஆட்டோ மொபைல்ஸ், அவிநாசி உள்பட பல்வேறு நிறுவனங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் நடை பெறும் மாநில அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்பர். அதில் வெற்றி பெறுபவர்கள் 4 மாநில அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்படுவர். இதில் வெற்றி பெறுபவர்கள் அகில இந்திய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, உலகத்திறன் போட்டிகளில் கலந்து கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட திறன் பயிற்சி இயக்கு னர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.