tamilnadu

திரையரங்கில் ஆணையர் ஆய்வு

தாராபுரம்,  ஜூலை 9- தாராபுரத்தில் உள்ள திரையரங்குகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி  முறையாக பராமரிக்கப்படு கிறதா என செவ்வாயன்று ஆணையர் ஆய்வு மேற் கொண்டார். தாராபுரத்தில் இயங்கி வரும் திரையரங்குகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு  முறையாக பராமரிக்கப் படுகிறதா என நகராட்சி ஆணையர் லட்சுமணன் தலைமையில் கட்டிட ஆய்வாளர்கள் வெங்க டேஷ், பழனிக்குமார், ஓவர் சியர் ஆல்துரை ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பொள்ளாச்சி சாலையில் உள்ள திரை யரங்கில் மழைநீர் தொட்டி முறையாக ஜல்லடை அமைத்து பராமரிக்காததை சரி செய்து முறையாக அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.  மேலும் தாராபுரத்தில் உள்ள வணிக வளாகங் களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி முறையாக அமைக் கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மழைநீர் சேகரிப்பு தொட்டி  அமைக்காத நிறுவனங் களுக்கு இந்த மாதம் 29 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.