tamilnadu

img

கோவை : வளர்ச்சிப் பணிகளை ஆணையர் ஆய்வு

கோவை, மார்ச் 4- கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்தில் நடை பெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணை யாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.  இதுகுறித்து மாநகராட்சி அலுவலக செய்திகுறிப்பில்  கூறியுள்ளதாவது, கோவை மாநகராட்சி, மேற்கு மண்ட லமான ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத் தின்கீழ் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர்  திட்டப் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணை யாளரும் தனி அலுவலருமான ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும், மேற்கு மண்டலம், கவுண்டம்பாளையம், வ.உ.சி. நகர் பிரதான சாலை பகுதியில் ரூ.61 லட்சம்  மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியையும், அதேபகுதி யில் புதிதாக கட்டப்பட்டுவரும் மின் மயானப் பணி களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைய டுத்து பணிகளை துரிதமாகவும், தரமானதாகவும்  முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநக ராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் ஏ.ஜே.செந்தில் அரசன், செயற்பொறியாளர் வி.சரவணக்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.