தீ.ஒ.முன்னணியினர் நலம் விசாரிப்பு
சேலம், மார்ச் 11- மேட்டூர் அருகே சாதிமறுப்பு திருமணம் செய்தவர் மற்றும் அவ ரது திருமணத்தை நடத்தி வைத் தவர் ஆகியோர் தாக்கப்பட்ட சம்ப வத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட் டவர்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் கள் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ளது கவுந்தப்பாடி கிரா மம். இங்குள்ள சலங்கபாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் இளமதி ஆகியோர் சமீபத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண் டனர். மேட்டூர் அருகிலுள்ள கொளத்தூர் கண்ணாமூச்சி பகுதி யில் இத்தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதியன்று இளமதியின் குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பதிற் கும் மேற்பட்டோர் செல்வத்தை யும், இவர்களுக்கு திருமணம் செய்து வைத்த ஈஸ்வரனையும் கடுமையாக தாக்கினர்.
மேலும் இளமதியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இத்தாக்குதலில் உள்ளான ஈஸ்வரன் மற்றும் செல்வம் இருவ ரும் படுகாயமடைந்து மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இத்தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் செல்வம் மற்றும் ஈஸ்வரனை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில துணைப் பொதுச்செய லாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேலு, மாவட்டச் செயலாளர் வீ.இளங்கோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மேட்டூர் தாலுகா செயலா ளர் வசந்தி மற்றும் செல்வகண பதி, மாதர் சங்க தாலுகா செயலா ளர் எஸ்.எம்.தேவி, கே.சண்முகம், மல்லிகார்ஜுனன், கே.எஸ்.பிரபு பாலாஜி, அண்ணாதுரை ஆகி யோர் நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். அப்போது செல்வம் கூறுகை யில், தனது மனைவி இளமதியை வலுக்கட்டாயமாக அவர்களின் குடும்பத்தினர் கடத்திச் சென்றுள் ளனர். ஆகவே, தனது மனைவியை மீட்டு தரவேண்டும். தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் புகார்
இதற்கிடையே, கோவையில் அனைத்து ஜனநாயக முற் போக்கு இயக்கங்கள் சார்பாக மேற்கு மண்டல காவல்துறை தலை வர் பெரியய்யாவிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து திராவிட விடுதலை கழக கோவை மாவட்ட நிர்வாகி நேருதாஸ் கூறுகை யில், சேலம் மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த மண மகள் இளமதியை கடத்தி சென்றவர்களிடம் இருந்து மீட்க வேண் டும். இளமதி கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய பாமகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் வேலுச்சாமி, அமைச்சர் கருப்பண் ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடத் தல் தொடர்பாக தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி. சௌந்தராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன் றத்தின் உத்தரவிற்கு மாறாக அதிகாரிகள் செயல்படுவதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனில் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், பெண்ணை மீட்க ஆட்கொ ணர்வு மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.