கோவை, ஜூலை 20- கண்காணிப்பு பணியை மேம்படுத்த மேல்சட்டையில் பொறுத்திக் கொள்ளும் வகையிலான கேமராக்கள் கோவை போக்குவரத்து காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உயிர் என்ற தனியார் அமைப்பு சார்பில் உடற்சட்டையில் பொறுத்திக்கொள்ளும் வகையில் 70 கேமராக்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையா ளர் சுமித்சரண் கலந்து கொண்டு கேமராக்களை போக்கு வரத்து காவலர்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, முதல்கட்ட மாக சட்டையில் பொருத்தப்படக் கூடிய 70 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 20 கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை நேரடி யாக கட்டுப்பாட்டு அறையிலிருந்தே பார்க்க முடியும் எனக் கூறிய அவர், இதன் மூலம் கண்காணிப்பு பணியை மேம்படுத்தவும், போக்குவரத்து காவலர்களுக்கும், பொது மக்களுக்குமிடையே ஏற்படும் வாக்கு வாதங்களைத் தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்தார். Police e eye app-ஐ இதுவரை 16ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.71 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பொருத் தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 14 ஆயி ரத்து 100 வழக்குகள் பதியப்பட்டு, அபாரதம் விதிக்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், ராபிட்டோ செயலி மூலம் இரு சக்கர வாகனம் வாடகைக்கு இயக்கப் படுவது குறித்து வட்டார போக்குவரத்து துறை நடவ டிக்கை எடுப்பார்கள் எனக் கூறிய அவர், தனியார் பேருத்து களில் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டு இருப்பது குறித்து நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.