தரங்கம்பாடி, நவ.12- நாகை மாவட்டம், செம்பனார் கோவில் அருகிலுள்ள கீழையூரில் தரங்கம்பாடி தாலுகாவையும், சீர்காழி தாலுகாவையும் இணைக் கும் வகையில் அய்யாவையனாறு ஆற்றின் குறுக்கே 1972 ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. கீழையூரில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் சீர்காழி தாலுகா பகுதிகளான பாகசாலை, செம்பத னிருப்பு, புதுப்பேட்டை, எருமல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலி ருந்து மாணவர்கள் பள்ளி செல்வ தற்கு இந்த பாலத்தின் வழியாக செல்ல வேண்டும். இந்த ஆற்று பாலத்தில் 30 வருடத்திற்கு மேலாக மயிலாடுதுறையிலிருந்து கீழையூர் மார்க்கத்தில் தடம் எண் 384 என்ற அரசு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பாலத்தில் இரு பக்கமும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி பெயர்ந்து விழுந்ததால் 5 ஆண்டுகளுக்கு மேலாக மாண வர்கள், பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே பாலத்தை கடந்து செல்கின்றனர். பேருந்துகள், பள்ளி வாகனங்கள் பாலத்தை கடக்க ஊர்ந்து தான் செல்ல வேண்டும். பாலத்தில் வாகனங்கள் கடக்கும் போது இருசக்கர வாக னத்தில் செல்பவர்கள் அபாயகர மான திக்திக் பயணத்தை மேற் கொள்கின்றனர். அய்யாவையனாறு பாலத்தின் இரண்டு பக்கமும் தடுப்பு சுவர் அமைத்து தர கோரி அரசு அதிகாரிக ளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்துள் ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தி னரிடம் கேட்டதற்கு, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், பொதுப்பணித் துறையினர் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப் பாட்டில் உள்ளது என்று கூறுவதால் 5 ஆண்டுகளாக பாலத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்கப்படாமல் கிடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.