மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினம்
அவிநாசி, அக்.2- அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பு சார்பில் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் புதனன்று அவிநாசியில் கொண்டாடப்பட்டது. பென்சனர் கூட்டமைப்பினர் அவிநாசி பேரூ ராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை யடுத்து நடைபெற்ற விழாவிற்கு வட்டாரத் தலைவர் ஆ.ராமசாமி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சு.பா.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். வட்டாரச் செயலாளர் சு.பாலகிருஷ்ணன் வரவேற்றார். அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்ட மைப்பு மாநிலத்தலைவர் அ.சாமிநாதன் சிறப்புரை யாற்றினார். அமைப்பு செயலாளர் ராஜண்ணப்பன், தலைமை நிலைய செயலாளர் ச.ராமசாமி, திருப்பூர் மாவட்டத் தலைவர் அகஸ்டின் ராஜ், துணைத் தலைவர் ஜார்ஜ், செயலாளர் ந.அங்கமுத்து, பொரு ளாளர் ஐ.ஹென்றி பிரான்சிஸ் ஜோசப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணைத் தலைவர் க. சுவாமிநாதன், ந.சின்னத்தம்பி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்தனர். இந்நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி சிந்தனைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில், அவி நாசி, தெக்கலூர், கருவலூர், திருமுருகன்பூண்டி, சேவூர், நடுவச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மூத்தகுடி மக்கள், பென்சனர்கள் பங்கேற்றனர். இதேபோல் அவிநாசி காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். களஞ்சியம் விவசாய சங்கம் சார்பில் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை யொட்டி புஞ்சைத் தாமரைக்குளத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.