சேலம், ஆக. 26- தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு 44 தொழிலாளர் நலச் சட்டங்களை இணைத்து நான்கு குறியீடுகளின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறது. இதனை கண்டித்தும், விற்பனைப் பிரதிநிதிகளுக்கு சட்ட ரீதியான வேலை விதிகளை அறி விக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் திங்க ளன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் ஓ.எஸ்.திலீப் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் ஓ.எஸ்.திலீப் மேனன், மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த், சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம், மாவட்ட செய லாளர் டி.உதயகுமார், மாவட்ட துணை செயலாளர் ஆர்.வெங்கடபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்ட இணைச் செயலாளர் சுந்தரராமன் நன்றி கூறி னார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் திரளாக பங்கேற்றனர்.