tamilnadu

img

குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்

பத்துக்கும் மேற்பட்ட கிராமத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோபி, அக். 12- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்க ளுக்கு வருவாய்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ள  கொங்கர்பாளையம் வனப்பகுதி யின் அருகில் அமைந்துள்ள குண் டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான விளாங் கோம்பை, கம்மனூர், மல்லியம் மன், துர்க்கம், கடம்பூர், குன்றி உள்ளிட்ட வனப்பகுதியில் வெள் ளியன்று இரவு பெய்த கன மழையினால் விளாங்கோம்பை, கம்பனூர் உள்ளிட்ட காட்டாறு களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர்  வரத்தொடங்கியுள்ளது.

அதனால் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து சனி யன்று காலையில் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளவான 42 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரில் 6 ஆயிரம் கன அடி அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குண்டேரிப்பள்ளம் உபரி நீர் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து வினோபாநகர், கொங் கர்பாளையம், வாணிப்புத்தூர், பள்ளத்தூர், கள்ளியங்காடு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கரையோரம் வசிக் கும் மக்கள் பாதுகாப்பான இடங் களுக்கும், மேடான பகுதிக்கு செல்லுமாறும், கால் நடைகளை யும் ஓடையில் இறங்காமல் பாது காக்கவும் தண்டோரா மூலம் அறி விக்கப்பட்டு வருகிறது. மேலும் மீன் பிடிக்கவோ, மற்ற தேவை களுக்காகவே ஓடையில் பொது மக்கள் இறங்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, கடந்த காலங்க ளில் குண்டேரிப்பள்ளம் அணை யின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து 20 அடிக்கும் கீழ் சென்றது. பருவ மழையின் போது இப்பகுதியில் போதிய மழை  இல்லாது போனதால் விவசாயி கள் கவலையடைந்திருந்தனர். தற்போது அணை நிரம்பியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், இன் னும் அணை தூர்வாரப்பட்டிருந் தால் அதிகளவு நீர் நிரம்பியிருக்க முடியும் எனவும் தற்போது அணை யில் 10 அடிக்கு மேல் சகதி உள்ள தால் அத்தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுவது வேதனை  அளிப்பதாகவும் தெரிவித்துள்ள னர். மேலும், குண்டேரிப்பள்ளம் அணையின் உபரி நீர் ஓடையில் இரண்டு தடுப்பணைகள் கட் டப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படாததினால் தற்போது அணையின் உபரி நீர்  வீணாக பவானி ஆற்றில் கலக் கிறது என இப்பகுதி விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.