மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர்கள் விவசாயிகள் விரோதப் போக்கை கண்டித்து சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஓசூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் நஞ்சுண்டன் தலைமையில் சிபிஎம் வட்டச் செயலாளர் மூர்த்தி சிஐடியு செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பீட்டர், மின் வாரிய மாவட்டச் செயலாளர் கருணாநிதி, நிர்வாகிகள் வாசுதேவன், கிருஷ்ணப்பா, மாதவன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.