tamilnadu

நீர்நிலைகள் தொடர்பான கணக்கெடுப்பு சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை, ஆக.14- 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள த்திற்கு பிறகு சென்னையில் மொத்தம் 210 நீர் நிலைகள் இருப்பதாக சென்னை மாநகராட்சி கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து இவற்றை சீரமைக்கும் பணி தொடங்கியது. இவற்றில் முதற்கட்டமாக சட்டமன்ற  உறுப்பினர் நிதியின் கீழ் 5 குளங்கள் ரூ. 5.95 கோடி செலவில் சீரமைக்கப்பட்டன. பின்னர், ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் அந்த நிதியின் கீழ் குளங்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 52 குளங்கள் 18.17 கோடி  மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் 32 குளங்களில் 75 சதவீத பணிகளும், 20 குளங்களில் 35 சதவீத பணிகளும் நிறைவடைந்துள்ளன.  சமூக பொறுப்பு நிதி, தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்கள் சார்பிலும் பணிகள் செய்ய 48  நீர்நிலைகள் ஒதுக்கீடு  செய்யப்பட்டு ள்ளது. இவற்றில்  16 நீர்நிலைகளில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.  இந்நிலையில் 90 குளங்களை சீரமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு நீர்  முதலீட்டு நிறுவனம் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த நீர்நிலை களில் புணரமைப்பு பணிகளை  மேற்கொள்ள பெரு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.  இந்நிலையில் சென்னையில் உள்ள நீர்நிலைகள் தொடர்பாக பல்வேறு துறைகளுடன் இணைந்து கணக்கெடுப்பு நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன்  மாளிகை யில் நடைபெற்றது. இதில் பொதுப்பணி த்துறை, குடிநீர் வழங்கல் துறை, வரு வாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.   இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில். மாநகராட்சியால் கண்டறியப்பட்ட 210 நீர்நிலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதைத்த விர்த்து 100க்கு மேற்பட்ட நீர்நிலைகள் மற்றும் குட்டைகள் சென்னை மாநக ராட்சி பகுதிகளில் இருப்பதாக கூறப்படு கிறது. இவற்றை  எவ்வாறு கண்டறிவது என்பது தொடர்பாக அனைத்து துறை களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் நீர் நிலைகள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.