tamilnadu

வேலூர் மற்றும் திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

அரசுப் பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்காததால் மாணவர்கள் அவதி

வேலூர், ஜூலை 12- வேலூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளை குறித்த நேரத்தில் இயக்காததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள  பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  இருந்து மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கிராமங்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. அதேபோல் காட்பாடி- பாகாயம் வழித்தடத்தில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.  இதனால் தனியார் பேருந்துகளில் மாணவர்கள் செல்லும்  நிலை. எனவே, அரசுப் பேருந்துகளை சரியான நேரத்தில் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும், பொதுமக்களும் கோரிக்கை  விடுத்துள்ளனர். போக்குவரத்துக் கழகம் உரிய நடவ டிக்கை எடுக்குமா?

காட்டன் சூதாட்ட தகராறில் வாலிபர் கொலை

திருவண்ணாமலை, ஜுலை 12- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காட்டன் சூதாட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பள்ளிகூடத் தெருவை சேர்ந்தவர் யோகா (எ) யோகனாந்தம்(39). இவர்  ஆரணி பழைய பேருந்து நிலையம் பின்புறம் டீக்கடை வைத்  துள்ளார். அதே கடையில் காட்டன் சூதாட்டம் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் யோகாவின் உறவினரான பாண்டியன் (38) என்பவ ரும் காட்டன் சூதாட்டத்தல் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் கடந்த பல மாதங்களாக யோகவிற்கும், பாண்டியனுக்கும் காட்  டன் சூதாட்டத்தில் தொழில் போட்டி இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பழைய பேருந்து நிலையத்தில் பாண்டியனுக்கும்,  யோகவிற்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டி யன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் யோகனாந் தத்தை சரமரியாக வெட்டியுள்ளார். இதில் யோகனாந்தம் சம்  பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த ஆரணி டவுன் காவல் துறையினர் யோகவின்  சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தலை மறைவாக இருந்த பாண்டியனை கைது செய்தனர்.