tamilnadu

சென்னையில் 3 நாட்களாக காய்கறி விலை உயர்வு

சென்னை, மே 9 -  கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளதை தொடர்ந்து சென்னையில் 3 வது நாளாக காய்கறி விலைகள் அதிக ரித்துக் கொண்டே செல்கிறது, கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவியது.  இங்கிருந்து மாநிலத்தின் பல பகுதிகளுக்கு சென்றுள்ளனர். கொயம்பேடு தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு களால் ஆயித்து 500க்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற் பட்டுள்ளது. எனவே, கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கு மாற்றாக புறநகர் பகுதியான திருமழி சையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தற்காலிக சந்தை ஞாயிறு (மே 10) முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளதால் குறைந்த அளவே காய்கறிகள் சென்னைக்கு வருகின்றன. இதனால் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. (கிலோ) சின்ன வெங்காயம் 130 ரூபாய், உருளைக்கிழங்கு, கத்தி ரிக்காய் 80 ரூபாய், பீன்ஸ் 180 ரூபாய், கேரட் 160 ரூபாய், இஞ்சி 160 ரூபாய், ஒரு முருங்கைக்காய் 15 ரூபாய், கீரை கட்டு  20 ரூபாய், கொத்தமல்லி கட்டு 20 ரூபாய், புதினா கட்டு 50 ரூபாய் என விற்பனையானது.