சென்னை, மே 8- சென்னையில் உள்ள கொரோனா தொற்று சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை மற்றும் உணவு வழங்கா ததை கண்டித்து நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று தாக்கியதற்கான அறிகுறி இன்றியே பலருக்கு தொற்று உறுதி செய் யப்படுகிறது.
நோயாளின் எண்ணிக்கை அதிக ரித்ததையடுத்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவ மனை, ஒமந்துரார் மருத்துவமனை களில் படுக்கைளின் எண்ணிக் கையை விட நோயாளிகளின் எண் ணிக்கை அதிகமானது. இதனை யடுத்து நோய் அறிகுறியின்றி தொற்று உறுதியானவர்களை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம், லயோலா கல்லூரி, வைஷ்ணவா கல்லூரியிலும் உள்ள சிகிச்சை முகாம்கள் மாற்றப்பட்டனர். இந்நிலையில் நந்தம்பாக்கம் முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ள வர்களுக்கு உரிய சிகிச்சையும், உணவு வழங்குவதில்லை, அடிப் படை வசதிகள் கூட இல்லை என்று கூறி நோயாளிகள் அங்குள்ள அதி காரிகளோடு வாக்குவாதத்தில் ஈடு பட்டு முழக்கங்களை எழுப்பினர். முகாமிற்கு மருத்துவர்கள் பெரும் பாலும் வருவதில்லை. நோயாளி களுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியாவிட்டால் வீட்டிற்கு அனுப்புங்கள் என்றும் கோரினர். இதனால் அங்கு பணியில் ஈடுபட்டி ருந்த செவிலியர்கள், காவல்துறை யினர் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றனர்.
இதனையடுத்து வெள்ளியன்று (மே 8) சென்னையில் உள்ள கோவிட் மையங்களை வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஆய்வு செய்தார், கோவிட் மையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட்டார். பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ள உணவு பட்டியலின்படி, சிகிச்சை மையங்களில் உள்ள நோயாளி களுக்கு உணவு வழங்கவும், கூடுத லாக உணவு மற்றும் குடிநீர் வழங்க வும் உத்தரவிட்டார்.
கட்டுப்பாடு பகுதிகள் அதிகரிப்பு
சென்னையில் மே.7வரை 2 ஆயி ரத்து 644 பேர் தொற்றுக்கு உள்ளாகி 358 பேர் குணமடைந்துள்ளனர். 23 பேர் மரணமடைந்துள்ளனர். 2 ஆயி ரத்து 255 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். கொரோனா தொற்று ஏற் பட்டவர்களின் இல்லம் உள்ள பகுதி கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்படுகிறது, இதன்படி சென்னையில் 419 ஆக இருந்த கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகள் 445 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 28 நாட்களாக ஒரு கொரோனா தொற்று ஏற்படாத நிலையில் 40 பகுதி கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளி லிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
33 கர்ப்பிணிகள்
சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 10 கர்ப்பிணிக ளும், காய்துரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் 12 கர்ப்பிணி களும், ராயபுரம் மருத்துவமனையில் 11 கர்ப்பிணிகளும் கொரோனா தொற் றோடு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 8 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடை பெற்றுள்ளது.
காவலர்கள்
சென்னையில் ஏற்கெனவே 60 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வேப்பேரி தீயணைப்பு நிலையத்தில் மேலும் 4 பேருக்கும், திருமுல்லைவாயில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், டி.பி.சத்திரம், கீழ்பாக்கம், மாம்பலம் காவலர் குடியிருப்பில் தலா ஒருவ ருக்கும், புதுப்பேட்டை ஆயுதப் படை காவலர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு
தி.நகரில் தங்க வைக்கப்பட்டி ருந்த கோயம்பேடு சந்தையில் சுமைத்துக்கும் தொழிலாளர்கள் 7 பேருக்கும், திருமங்கலம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 10 தொழி லாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மரணம்
ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்து வமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவ மனை, தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள், 2 ஆண்கள் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.