tamilnadu

img

டிராக்டர்கள் ஏற்றுமதியில் தொடர்ந்து முதலிடம்

சென்னை, மே 7 இந்தியாவின் முன்னணி டிராக்டர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகிய சோனாலிகா டிராக்டர்ஸ் சென்ற ஏப்ரல் (2020) மாதத்தில் 302 டிராக்டர்களை ஏற்றுமதி செய்து ஏற்றுமதி வணிகத்தில் தேசிய அளவில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.  கொரோனா  பாதிப்பையும் மீறி இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.  இது குறித்துப் பேசிய சோனாலிகா குழுமத்தின் மேலாண் இயக்குனர் முனைவர் தீபக் மிட்டல் இந்த சிரமமான தருணத்திலும் நாங்கள் ஏற்றுமதியில் முதல் இடத்தைத் தக்க வைத்து எங்களது தலைமை குணத்தை நிரூபித்துள்ளதற்கு முக்கிய காரணம் சர்வதேச அளவில் விவசாயிகள் எங்கள் பிராண்டின் மீது கொண்ட நம்பிக்கையும், அங்கீகாரமும் தான் என்றார்.  விவசாயிகளின் வளத்தை மேம்படுத்த நாங்கள் உறுதிபூண்டு உள்ளதால் எங்களது தொழில்நுட்பத்தை சர்வதேச அளவில் தொடர்ந்து உயர்த்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.