tamilnadu

img

பெரியார், அம்பேத்கர் பெயர்களை தவிர்த்து உரையற்றிய ஆளுநர்!

தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முறையாகப் படிக்காத ஆளுநருக்கு சட்டமன்றத்திலேயே முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று உரையாற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு, சுய மரியாதை, சமூக நீதி, திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளையும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் பெயர்களையும் தவிர்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முறையாகப் படிக்காத ஆளுநருக்கு சட்டமன்றத்திலேயே முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசு தயாரித்துக் கொடுத்து உரையை ஆளுநர் முறையாக படிக்காதது விதியை மீறிய செயல் என்றும், அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில உரை மற்றும் பேரவை தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக் குறிப்பில் ஏற்ற வேண்டும் என்றும்,  அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் படித்த பகுதிகள் அவைக் குறிப்பில் இடம்பெறாது என்றும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானங்களை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.