tamilnadu

img

வலுக்கு அனுப்பி வைத்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு  கைபேசி வழங்க நேர்காணல்

வலுக்கு அனுப்பி வைத்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு  கைபேசி வழங்க நேர்காணல்

கடலூர், டிச.11- கடலூர் மாவட்டத்தில் உள்ள பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச முடியாத, செவித்திறன் குறைவுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி செல்போன் பெற விண்ணப்பித்த 440 மாற்றுத்திற னாளிகள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் நேர்காணல் நடை பெற்றது. இதில் திட்ட அலுவலர் (தமிழக ஊரக வாழ்வாதார திட்டம்), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.