tamilnadu

img

உலகம் முழுவதும் கொரானா நோய் அச்சுறுத்தி

உலகம் முழுவதும் கொரானா நோய் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவலைத் தடுக்கும் விதமாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த  ஃபார்முலாவை பயன்படுத்தி சென்னை  ஐ.ஐ.டி ஆய்வு மாணவர்கள் அசார், சூரஜ் ஆகியோர் கிரிமிநாசினி தயாரிக்கும் முறையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு கற்றுக் கொடுத்தனர். தயாரிக்கப்பட்ட கிருமி நாசினிகளை  மருத்துவர்களுக்கு வழங்க இருப்பதாக வாலிபர் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். இந்த பயிற்சியின் போது,  வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் தீபா, வட சென்னை மாவட்டச் செயலாளர் சரவணத்தமிழகன், பொருளாளர் முருகேசன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் மஞ்சுளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.