நாடு முழுவதும் உள்ள 41 பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றி தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து ஆவடியில் உள்ள ஒசிஎப் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய பாதுகாப்புத் துறை தொழிலாளர்கள் சம்மேளனம், ஐ.என்.டியுசி, பி.எம்.எஸ்., தொமுச, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப்போராட்டத்திற்கு சம்மேளன பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் தலைமை தாங்கினார். வேலுச்சாமி, சதாசிவம், சந்திரபிரகாஷ், முகமத்மீரா, காளிதாஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.