கள்ளக்குறிச்சி. மே 29- கல்வராயன்மலை மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும், அவர்களை தொடர்ந்து துன்புறுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும் காவல்துறையினர், வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளக் குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 150க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்களின் வாழ்வாதார தேவை களுக்கு அவர்களின் அனுபவ நிலங்களில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் காய்ந்த விறகுகள் மற்றும் கால்நடைக்கு தேவையான செடிகொடிகளை சேக ரித்து எடுத்துச் செல்கின்றனர். அதேபோல சிறுகுடி யிருப்புகள் கட்டுவதற்கு மலையில் உள்ள ஓடை களில் மணல், மண் சேகரிப்பது, குடிநீருக்காக கிணறு வெட்டுவது, ஆழ்துளைக் கிணறு அமைப்பது போன்ற தேவையான பணிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் வனத்துறை நிலங்களில் அத்துமீறி நுழைவதாக பொய் வழக்குப் போட்டு வனத்துறை யினர் கைது செய்கின்றனர். அதேபோல் மதுவிலக்கு காவல் துறையினரும் மலைவாழ் மக்கள் பலர் திருந்தி நேர்மையாக உழைத்து பிழைக்கும் தற்காலத்தில் அவர்களை கள்ளச்சாரா யம் காய்சுகின்றனர் எனக் கூறி பொய் வழக்கில் கைது செய்கின்றனர். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யா மல் அவர்கள் தப்புவதற்கு உதவியாக திருந்தி வாழ்ப வர்கள் மீது பொய் வழக்கு போடும் காவல்துறை யினர், வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு அர சின் பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுகுறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.