சென்னை,டிசம்பர்.09- புயல் பாதிப்பால் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் கட்டணமில்லாமல் சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பெஞ்சால் புயல் பாதிப்பால் மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் சான்றிதழ் கோரி அரசு தேர்வுகள் இயக்கத்தில் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் இணைக்கப்பட்டுள்ள
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது