tamilnadu

img

நிர்வாக குளறுபடிகளை கண்டித்து மாணவர் சங்கத்தினர் போராட்டம்! போலீசார் கைது செய்ததால் பரபரப்பு

நிர்வாக குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நிலவும் நிர்வாக குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் முழு நேர ஆசிரியராக பணியாற்ற அனுமதித்தது,  தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததில் நடைபெற்ற முறைகேடு போன்றவை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்கலைக்கழகம் முன்பு செவ்வாயன்று  ஆர்ப்பாட்டம் நடத்த வந்த சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார், செயலாளர் இரா.பாரதி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.