புதுச்சேரி, மே 12-புதுச்சேரியில் நடைபெற்ற கம்பன் விழாவில் பாடகி பி.சுசிலாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் 54 ஆம் ஆண்டு கம்பன் விழாகடந்த 10 ஆம் தேதி தொடங்கிஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிந்தனை அரங்கத்திற்கு ஞானசுந்தரம் தலைமை தாங்கினார். கம்பனின் சிலம்பு என்ற தலைப்பில் பேராசிரியர்கள் ராஜகோபாலன், அப்துல் காதர், ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர்.அதனைத் தொடர்ந்து திரைப்பட பின்னணிப்பாடகி பி.சுசிலாவிற்கு பாராட்டு விழாநடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி பாராட்டி, நினைவு பரிசினை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,“ கம்பன் விழா புதுச்சேரி எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் பாராட்டி கவுரவித்து வருகிறது” என்றார்.வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் கூட தனது குழந்தை களை தமிழ் மொழியில் தான் படிக்கவைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். பாடகி சுசிலாவின் இசைத் தொண்டும், தமிழ் தொண்டும் மேலும் தொடர வேண்டும், மனக்குழப்பத்தில் இருக்கும்போது அவரது பாடல்களை கேட்டால் நமக்கு நிம்மதி கிடைக்கும். தற்போது அமெரிக்காவில் மியூசிக் தெரபி (இசை சிகிச்சை) மூலம் நோய்க்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். புதுச்சேரியில் மியூசிக் தெரபி மையம் தொடங்க இளையராஜா விரும்பினார். அதற்காக அவருக்கு நிலம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் உதவ அரசு தயாராக உள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார்.இவ்விழாவில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.