tamilnadu

img

சுடுகாடு ஆக்கிரமிப்பு: அல்லாடும் மிடுகரப் பள்ளி மக்கள்

ஓசூர், அக்.11- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை சாலையில் அரசு ஐடிஐ, அரசு கலைக் கல்லூரிக்கு மேற்கே பிரதான சாலையிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில்  உள்ளது மிடுகரப்பள்ளி. 70 ஆண்டுகளுக்கும் பழமை யான கிராமம். இங்கு 200 வீடுகளில்  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். தலித் குடும்பங்களே அதிகம். ஊரின் தெற்குப் பகுதியில் தலித் மக்களுக்கு 89 சென்ட் நில  பரப்பில் சுடுகாடு உள்ளது. 1999 ஆம்  ஆண்டு அளவீடு செய்யப்பட்டு தொடர்ந்து தலித் மக்கள் பயன் பாட்டில் இருந்து வருகிறது.  2009 ஆம் ஆண்டில் இந்த சுடு காட்டின் தண்ணீர் தேவைக்காக ஊராட்சிமன்ற நிர்வாகத்தால் ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்டு மோட்டார் அறையும் கட்டப்பட்டது. பல முறை இந்த சுடுகாடு ஆக்கிர மிக்கப்படும் சூழலில் மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் சார்பில் அரசு  அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள்  கொடுக்கப்பட்டு பல போராட்டங்க ளும் நடத்தப்பட்டது. மாற்று சமூகத்திற்கு  சிறிய அள விலான சுடுகாடு கிழக்குப் பகுதியில் உள்ளது. இடையில் பசவலிங்கராஜ் என்பவர் நிலம் உள்ளது. ஐடிஐ பின்புறத்திலிருந்து அரசு கலைக் கல்லூரியையொட்டி அந்தி வாடி ஏரிக்கு செல்லும் ராஜ கால்வாய் ஒன்று இந்த சுடுகாட்டை யொட்டி வருகிறது. இந்தக் கால்வாய் அரசு  கலைக் கல்லூரிக்கு எதிரில் தனியார்  நில விற்பனை வணிகம் செய்பவ ரால் ஆக்கிரமிக்கப்பட் டுள்ளது. அதே போல், சுடுகாட்டுக்கு அருகில் பச  வலிங்கராஜினாலும் ஆக்கிர மிக்கப்பட்டு சுவர் எழுப்பப் பட்டுள்ளது. இதனால் சுடுகாட்டிற்கு செல்பவர்களுக்கு பாதை இல்லை. அத்துடன் ராஜ கால்வாயை அடைத்து அதற்கு பதிலாக வேறு வழியாக சிரிய குழாய் பதித்ள்ளார்.

தலித் சுடுகாட்டுக்கு போடப்பட்ட ஆழ்துளை கிணற்று நீரை பக்கத்தில்  உள்ள தனியார் நில, வீடு, விற்பனை யாளர் பகுதிக்கு பயன்படுத்த குடிநீர்  வாரியத்தினரே குழாய் போட்டு கொடுத்துள்ளனர். ஆனாலும், சுடு காடு பயன்பாட்டிற்கு தண்ணீர் இல்லை. போதாகுறைக்கு கடந்த ஜன வரி மாதம் மாவட்ட வருவாய் அலு வலர் விமல்ராஜ் தலித் மக்களுக்கு விரோதமாக சுடுகாட்டு அளவை 49 சென்ட் தான் என கூறியுள்ளார். ஆக்கிமிரப்பாளர்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய தோடு புகார் மனுக்களும் கொடுக் கப்பட்டன. ஒன்பது மாதத்தை கடந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி  ஒன்றியச் செயலாளர் பிஜி.மூர்த்தி,  கிளைச் செயலாளர் நாராயணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் நாகேஷ் பாபு, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் சுரேஷ் ஆகியோர் செய்தி யாளர்களிடம் கூறுகையில்,“ மிடு கரப்பள்ளி தலித் மக்கள் பயன்ப டுத்தி வரும் சுடுகாட்டு நிலம் முழு மைக்கும் வேலி அமைத்து தர  வேண்டும், ஆழ்துளை கிணற்றை மீட்டுத்தர  வேண்டும், மாற்று சமூகத்தி னரின் சுடுகாடு ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும், தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ராஜ கால்வாயை மீட்க வேண்டும் சுடு காட்டிற்கு தண்ணீர் தொட்டியும், சிறு  மண்டபமும் கட்டித் தர வேண்டும்” என்றனர்.