tamilnadu

img

பள்ளி அருகே கழிவுநீர் கால்வாய்: அகற்றுக சிபிஎம் கோரிக்கை

திருவள்ளூர், ஜூலை 11- திருநின்றவூர் கோமதி புரத்தில்  உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி நுழைவு வாயிலின் அருகே தேங்கி நிர்க்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருநின்றவூர் கோமதி புரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 2ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் அருகே காவல்துறை குடியிருப்பும் உள்ளது. இப்பள்ளியின் நுழைவு வாயிலையொட்டி கழிவு நீர் கடந்த இரண்டு ஆண்டு களுக்கு மேலாக தேங்கி யுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மட்டு மல்லாது முதியோர், வியாபாரிகள்  என பலரும் அவதிப்படுகின்றனர். பள்ளி அருகே கழிவு நீர் தேங்கி கிடப்பதால் மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே கழிவு நீரை வெளியேற்ற, அடைப்பு ஏற்பட்டுள்ள  கால்வாய்களை சீரமைக்க வேண்டும், குடியிருப்பு பகுதிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பூந்தமல்லி ஒன்றியக்குழு உறுப்பினர் டி.கணேசன் திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் சுகாதாரத் துறை ஆய்வாளர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார். பேரூராட்சியில் நிதி இல்லாததால் கால்வாயை சீரமைக்க முடியவில்லை என அதிகாரிகள் கூறுகின்ற னர். பேரூராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளத நிலையில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.