சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண மோசடி வழக்கில் கைதாகி உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்ப்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜியை மேலும் விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.